என்தன் பரமகுரு செய்த – Enthan Parama Guru seitha Tamil Christian CSI Keerthanaigal song lyrics in English.
பல்லவி
என்தன் பரமகுரு செய்த உபகாரத்தை
ஏத்தித் துதிப்பேன் நானே
அனுபல்லவி
தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச்
சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான – என்
சரணங்கள்
1.வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத
மகிமைப்ர தாபம் மிகுத் தோன் – அதி
ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த
யாவும் நெறியில் பகுத்தோன்
மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின்
விளங்கும் அனந்த சுகத்தோன் – அக்கி
யானத் திருள் அகலத்தான் இப்புவியில் உற்ற
அந்த முடிவில்லாத சுந்தர கிறிஸ்துநாத- என்
2.மிக்கப் பராபரனோ டொக்க ஒன்றித்திரந்த
முக்கியம் அனைத்தும் விடுத்து – ஏவை
மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில்
மனுடாவதாரம் எடுத்து
பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டரும்
பாடு பட்டுயிர் கொடுத்து – நரர்
அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து
அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து
3.பாவத் திகில் அறுத்துச்,சாபத்தையும் தொலைத்து
பகைஞன் வினையை நீக்கிக் – கொடும்
ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த
அடிமைகளைக் கைதூக்கி
தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத்
திருவுள மாய் உண்டாக்கி – நித்தம்
மாபத்தி ரமாய்ப் பிரதாபித் தனுக்ர கித்து
வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான
Enthan Parama Guru seitha song lyrics In English
Enthan Parama Guru seitha Ubakaraththai
Yeaththi Thuthippean Naanae
Thanthai Paranidathanantha Thoni Vilanga
Saththamga Nintra Niththiya Vasthuvaana – Endhan
1.Vaanathamalar Sothanai Kirakithu Mudiyatha
Magimai Pirathabam Miguthon Athi
Gnanathudan Ulagum Paramum Athil Niraintha
Yavum Neriyil Puguthon
Meanmai porulathaga Deva Magathuvaththin
Vilangum Anantha Sugathon Akki
yaanathirul Agalathaan Ippuviyil Uttra
Antha Mudivillatha Sunthara Kiristhunaatha – En
2.Mikka Paraparanodukka Ontri Thirintha
Mukkiyam Anaithum Viduththu Yeavai
Makkal Thuyar Agala Thukka Ulagamathil
Maanudathavaram Eduthu
Pashamaga Adimai Kolam Kondarum
Paadu Pattuyir Koduthu Narar
Akkirama Anaithum Nikkiragam Purinthu
Anthakaaram Ara Vantha Yesu Kiristhu
3.Paava Thigil Aruthu Sabaththaiyum Tholaithu
Pagaigan Vinaiyai Neekki Kodum
Aabathilum Adarntha Kobathilum Viluntha
Adimaikalai Kaithookki
Devathiraviyam Entra Jeeva Pojanaththai
Thiruvulamaai Undakki Niththam
Maapaththiramaai Pirathabiththanukku Kirakithu
Vaithu Kaatha Orae Niththiya Thirithvamana
Enthan Parama Guru seitha – என்தன் பரமகுரு செய்த,Tamil paamalai songs,Tamil paamalai lyrics,tamil keerthanaisongs lyrics, csi tamil songs,tamil christians


