ஆண்டவரின் நாமமதை – Aandavarin Namamathai Tamil Christian Keerthanaigal song lyrics
ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர்
ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன் – ஆண்
1.உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மன
உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன் – ஆண்
2.கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி
கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை – ஆண்
3.வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன் – ஆண்
4.மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும் – ஆண்
5.பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே – மகா
புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே – ஆண்
6.சீருடையோர் (சீரியர்கள் ) பேரில் அன்பு கூருவேனே – நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே – ஆண்
ஆண்டவரின் நாமமதை பாடல் வரிகள், Aandavarin Namamathai Lyrics
Aandavarin Namamathai song lyrics in English
Aandavarin Namamathai Eendu Pottruvean Avar
Aalukaiyin Neethi Anbin Vaazhi Sattruvean
1.Uththma Vazhiyil Nitham Puththi Kolluvean Mana
Unmaiyudan Vaaznthu Theeya Kanmam Thalluvean
2.Ketta Visayangalai Enai Ottuvathilla Mathi
Keadarin Puralikalum Kittuvathilla
3.Vanjakangalai Ugakkum Nenjai Neekkuvean Polla
Maarkangalilae Nadakkum Theerkkum Pokkuvean
4.Mattravanai Yeasi Vaayaal Kuttrangal Seiyum Thusta
Maanthar Mealae Pattramalen Paanthavam Naiyum
5.Poiyyarkalai Ennudan Yuiya Otteanae Mahaa
Puralai Seiyum Eththarkalin Thiralil Kitteanae
6.Seerudaiyoar ( Seeriyargal )Poaril Anbu Kooruveanae Nalla
Seerologu Saantroor Thayai Searuveanae
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
And the LORD God said unto the woman, What is this that thou hast done? And the woman said, The serpent beguiled me, and I did eat.
ஆதியாகமம் | Genesis: 3: 13
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Aandavarin Namamathai – ஆண்டவரின் நாமமதை’.
- It includes verses in Tamil, emphasizing themes of righteousness and divine guidance.
- The translation of the song’s lyrics into English is also provided for better understanding.
- Each verse reflects a commitment to live truthfully and avoid sin.


